/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட சிலம்பம் போட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அசத்தல்
/
மாவட்ட சிலம்பம் போட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அசத்தல்
மாவட்ட சிலம்பம் போட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அசத்தல்
மாவட்ட சிலம்பம் போட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அசத்தல்
ADDED : டிச 11, 2025 06:46 AM

அன்னூர்: மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் வெற்றி பெற்றனர்.
பார்க் பொறியியல் கல்லூரியில், தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
இதில் 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில், புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ஒன்பது பேர் முதல் மூன்று இடங்களை வென்று அசத்தினர்.
சாதித்த மாணவ, மாணவியருக்கு, பள்ளி வளாகத்தில், நடந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் இருதய மரிய ஜோசப் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். தலைமை ஆசிரியை சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

