sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

/

மாநில போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு


ADDED : அக் 04, 2024 10:18 PM

Google News

ADDED : அக் 04, 2024 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : திருச்சியில் இம்மாதம் நடக்கும் மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் ஏழு பேர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

கோவையில் முதலமைச்சர் கோப்பைக்கான, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் கற்பகம் கல்லூரியில் நடந்தது. இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் அணி, பங்கேற்று முதல் இடம் பெற்றது. இந்த அணியில் இடம்பெற்ற மாணவியர் திவ்யா, சந்தியா, மகாஸ்ரீ, ஜீனா, எஸ்தர் ராணி, கலைவாணி, அஞ்சலி ஆகியோர் இம்மாதம், 6 முதல், 11 வரை திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கோவை அணியில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கோவையில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களில் கமலேஷ், ஸ்ரீதர், சந்தோஷ் ஆகியோர் கோவை அணியில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் பிரேம்நாத், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார், ஆசிரியை சுதா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us