ADDED : செப் 01, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில், அடிப்படை வசதிகள் சார்ந்த குறைகள், புகார்களை மக்கள் மனுக்களாக அளிக்கின்றனர்.
கிழக்கு மண்டலம், 55வது வார்டுக்கு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரோட்டில் உள்ள ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடப்பதால், மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.