/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம்
ADDED : மே 15, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 37 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.
பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது அதிருப்தி உள்ளவர்களின் மனுக்கள் மீதான, மறு விசாரணை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் நடக்கிறது.
மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், 39 மனுக்கள் மீது மறுவிசாரணை நடத்தப்பட்டது. அதில் 37 மனுக்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது; 2 மனுக்கள் மேல் விசாரணை செய்ய, பரிந்துரை செய்யப்பட்டது.