sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நடப்பாண்டில் 172 பேர் மீது 'குண்டாஸ்' குற்றங்கள் குறைந்து விட்டதாம்

/

 நடப்பாண்டில் 172 பேர் மீது 'குண்டாஸ்' குற்றங்கள் குறைந்து விட்டதாம்

 நடப்பாண்டில் 172 பேர் மீது 'குண்டாஸ்' குற்றங்கள் குறைந்து விட்டதாம்

 நடப்பாண்டில் 172 பேர் மீது 'குண்டாஸ்' குற்றங்கள் குறைந்து விட்டதாம்


ADDED : நவ 13, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நடப்பாண்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட, 172 பேர் மீது, குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாநகரில் போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, 'ஏ பிளஸ்', 'ஏ', 'பி', 'சி' என, நான்கு பிரிவுகளாக ரவுடிகள் பிரிக்கப்படுகின்றனர். 'ஏ பிளஸ்' பிரிவில், 13, 'ஏ' பிரிவில், 19, 'பி' பிரிவில், 209, 'சி' பிரிவில், 478 என, மொத்தம், 719 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை காரணமாக, தற்போது குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறுகின்றனர் போலீசார்.

போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

மாநகரில் கடந்த ஜன., முதல் கடந்த மாதம் வரையிலான, 10 மாதங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 54, திருட்டு வழக்கில், 16, சட்டம் - ஒழுங்கு பாதிக்க காரணமானவர்கள் மற்றும் ரவுடிகள் என, 69, பாலியல் குற்றவாளிகள், 26, சைபர் கிரைம் குற்றவாளிகள், 7 என, மொத்தம், 172 பேர் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், மாநகரில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. மாநகரில் கடந்தாண்டு 'கிரேவ் கிரைம்ஸ்'(மோசமான குற்றங்கள்) குற்றங்கள் குறித்து, 86 வழக்குகள், இதர குற்றங்கள் குறித்து, 1,132 வழக்குகளும் பதிவாகியிருந்தன. நடப்பாண்டு இவை முறையே, 54 மற்றும் இதர குற்றங்கள், 642 என்ற நிலையில் உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

155 ரவுடிகள் வெளியேற்றம்

கோவையில், 51 'ஏ' சட்டப்பிரிவின் கீழ், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள், ரவுடிகள் ஆறு மாதங்களுக்கு ஊரை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். கடந்த, 10 மாதங்களில், 155 பேர் அவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீண்டும் திரும்ப வந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அவர்களிடம் பிணைப் பத்திரம் பெறப்படுகிறது.








      Dinamalar
      Follow us