/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்கோபுர மின்விளக்கு பொருத்தம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
/
உயர்கோபுர மின்விளக்கு பொருத்தம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
உயர்கோபுர மின்விளக்கு பொருத்தம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
உயர்கோபுர மின்விளக்கு பொருத்தம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
ADDED : ஏப் 03, 2025 11:43 PM

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் பொருத்தப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ளது பழைய வால்பாறை எஸ்டேட். இங்கு, சோலையாறுஅணை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய மூன்று ரோடுகள் சந்திக்கின்றன. இந்த இடத்தில் சுற்றுலா பயணியர் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை அகற்றினர். வழிகாட்டி பலகை இல்லாததால், சுற்றுலா வருவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதே போல், இந்தப்பணிக்காக நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கும் அகற்றபட்டது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பழைய வால்பாறை ரோட்டில் மக்கள் இரவு நேரத்தில் செல்ல அச்சப்பட்டனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் வரும் சுற்றுலா வாகனங்கள் கோபுர மின்விளக்கு எரியாததால், கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், பழைய வால்பாறை ரோடு ரவுண்டானா பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் பொருத்தப்பட்டது. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா வாகன ஓட்டுநர்களும் நிம்மதியடைந்தனர்.
சரியா 'பிட்' பண்ணல!
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'நீண்ட நாட்களுக்கு பின், உயர்கோபுர மின்விளக்கு, ரவுண்டானாவில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மின் கம்பத்தின் மேல் பகுதி சரிந்த நிலையில் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சரிந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்து, உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டும்,' என்றனர்.

