/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எச்.ஐ.வி., விழிப்புணர்வு கூட்டம்
/
எச்.ஐ.வி., விழிப்புணர்வு கூட்டம்
ADDED : அக் 19, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எச்.ஐ.வி., மற்றும் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவீந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், திட்ட ஆலோசகர் விஜய் பிரகாஷ் பேசுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எச்.ஐ.வி., பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. காச நோய்க்கும் முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி., கிருமி தொற்று குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.
கூட்டத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.