/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விற்பனை கூடத்தில் பொருளீட்டு கடன்
/
விற்பனை கூடத்தில் பொருளீட்டு கடன்
ADDED : நவ 06, 2025 11:14 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இ-நாம் மற்றும் ஏலம் முறையில் விற்பனை செய்கின்றனர்.
2024 -- 2025ம் ஆண்டில், 18 விவசாயிகளால் இருப்பு வைக்கப்பட்ட கொப்பரைக்கு, ரூ.90 லட்சம் பொருளீட்டுக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
9 வியாபாரிகளால் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட விளை பொருளுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வாயிலாக, ரூ.8 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விளைபொருள்கள் கிடங்கில் இருப்பு வைக்கும் பொழுது, ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சோலார் டிரையரில் காயவைத்து, ஈரப்பதம் நீங்கியவுடன் கிடங்கில் இருப்பு வைப்பதற்கான வசதி இருப்பதால், விவசாயிகள் பலர், மழை காலங்களில் தங்களது விளை பொருட்களை காய வைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
எனவே, விற்பனை கூடத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், தங்கள் ஆவணங்களைக் கொண்டு விற்பனை கூடத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும்.
இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

