sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி

/

பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி

பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி

பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி


ADDED : ஏப் 20, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கடந்தாண்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான நிறுவனங்கள் தங்களது சேவையை விரிவுபடுத்தின.

இதன் காரணமாக, விமான பயணிகள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூடுதல் பயணிகள் பயன்படுத்தும் வகையில், வசதிகள் ஏற்படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மறுசீரமைப்பு மேற்கொள்ள, விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.68 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிக பயணிகள் வந்ததால், பயணிகள் சிரமப்பட்டனர்.

கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஸ் கூறுகையில், ''பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டுகளை விட அதிகரித்துள்ளது. அமரக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us