/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
29வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில் இந்திய வீரர் முதலிடம்
/
29வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில் இந்திய வீரர் முதலிடம்
29வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில் இந்திய வீரர் முதலிடம்
29வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில் இந்திய வீரர் முதலிடம்
ADDED : செப் 30, 2024 11:36 PM

கோவை : கோவையில் நடந்த, 29வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இம்ரான், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26 முதல், 30வது வரையிலான ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டிகள், அலங்கார் ஓட்டலில் நடக்கிறது. ஆக., 30 முதல் கடந்த, 5ம் தேதி வரை, 26வது போட்டி இடம்பெற்றது.
தொடர்ந்து, 27, 28வது போட்டிகளை அடுத்து கடந்த, 23 முதல் நேற்று வரை, 29வது போட்டி நடந்தது. இதில், பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிட், கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த டோலோகான் டெகின், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
தவிர, இந்தியாவை சேர்ந்த இம்ரான், ஆகாஷ், கிரேமன், நந்தீஸ், ரேயன் என, 10 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், 9 சுற்றுகளின் முடிவில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இம்ரான், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
பெலாரஸ் நாட்டின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த டோலோகான் டெகின் ஆகியோர் தலா, 6 புள்ளிகளும், இந்தியாவை சேர்ந்த ஆகாஷ், 5 புள்ளிகள், ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிட் ஆகியோர் தலா, 4.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்தியாவின் கிரேமன், 4 புள்ளிகள், நந்தீஸ், 3.5 புள்ளிகள், ரேயன், 3 புள்ளிகள், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, 2 புள்ளிகளும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற இம்ரானிற்கு, தமிழ்நாடு மாநில சதுரங்க சங்க தலைவர் மாணிக்கம் பரிசுகள் வழங்கினார். துணை தலைவர்கள் ஆனந்தராம், விஜயராகவன், எப்ரேம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.