ADDED : செப் 15, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை போலீஸ் ஸ்டேஷனில், புது இன்ஸ்பெக்டர் முருகையன் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் அண்மையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் காரமடை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஞானசேகரன், புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, பவானி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முருகையன், காரமடை இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.