sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

/

 கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

 கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

 கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு


ADDED : டிச 03, 2025 07:36 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: அத்திப்பாளையம் ஊராட்சியில், வரும் 5ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கடந்த 2024 ஏப்., 1 முதல், 2025 மார்ச் 31 வரை சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், அத்திப்பாளையம் ஊராட்சியில் நடந்த பணிகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

வட்டார வள அலுவலர் தலைமையில் தணிக்கையாளர்கள் பணிகளை அளவீடு செய்து வருகின்றனர். ஆவணங்களையும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. வரும் 5ம் தேதி ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி, பயன்பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை, கண்டறியப்பட்ட ஆட்சேபனைகள் வாசிக்கப்படுகிறது.

'அத்திப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம்' என, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராம மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us