sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

/

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 

முதலீட்டு பணத்துக்கு அதிக லாபம் தருவதாக ஐ.டி., ஊழியரிடம் மோசடி 


ADDED : மே 15, 2025 03:25 AM

Google News

ADDED : மே 15, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை, கணபதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 36; சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், 'டீம் லீடர்'.

இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த, ஏப்., மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பெங்களூருவில் செயல்பட்டு வரும், 'பிலிப் சைடு குளோபல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் கூறினார்.

இதை நம்பிய புவனேஸ்வரன், மோசடி நபர் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 16 தவணைகளாக ரூ. 21.17 லட்சம் அனுப்பினார். இதன் பின், லாப பணத்தை கேட்டபோது, அந்த நபர், புவனேஸ்வரனை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டார். புவனேஸ்வரன் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புவனேஸ்வரன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us