sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கம்ப ராமாயண சொற்பொழிவு; அன்னுாரில் 6ல் துவக்கம்

/

கம்ப ராமாயண சொற்பொழிவு; அன்னுாரில் 6ல் துவக்கம்

கம்ப ராமாயண சொற்பொழிவு; அன்னுாரில் 6ல் துவக்கம்

கம்ப ராமாயண சொற்பொழிவு; அன்னுாரில் 6ல் துவக்கம்


ADDED : ஏப் 03, 2025 11:49 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் பெருமாள் கோவிலில் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு, வரும் 6ம் தேதி துவங்குகிறது.

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 20வது ஆண்டு ராம நவமி விழா, வரும் 6ம் தேதி துவங்குகிறது. 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு ராமர் பிறப்பு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு, 'கருமுகில் கொழுந்து துளிர்த்தது' என்கிற தலைப்பில், மகேஸ்வரி சத்குரு பேசுகிறார்.

வரும் 7ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், மதியம் மகா தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, 'இணைந்தது, யோகமும் போகமும்' என்னும் தலைப்பிலும், 8ம் தேதி இரவு 'சுடுமோ பெருங்காடு' என்னும் தலைப்பிலும், 9ம் தேதி 'வஞ்சி மகள் வந்தாள்' என்னும் தலைப்பிலும், வரும் 10ம் தேதி இரவு 'வானரங்கள் வியந்த வல்லமை' என்னும் தலைப்பிலும் சொற்பொழிவு நடைபெறுகிறது.

நிறைவு சொற்பொழிவு வரும் 15-ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து மகா தீபாராதனை, சுவாமி உட்பிரகார உலா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us