sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க., நிர்வாகியிடம் விசாரணை


ADDED : நவ 29, 2024 07:21 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் விசாரணைக்கு ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில், 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை, ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசார் இதுவரை, 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயான் மற்றும் அவரது கூட்டாளிகள் கேரளா தப்பி சென்றபோது, கூடலுார் அருகே வாகன சோதனையில் போலீசார் அவர்களை பிடித்தனர். அப்போது அவர்களை விடுவிக்குமாறு தொலைபேசியில் கூடலுாரை சேர்ந்த சஜீவன் தெரிவித்தாக கூறப்படுகிறது.

சஜீவன் கோடநாடு பங்களாவில் மர வேலைகள் செய்து வந்தவர். இதன் வாயிலாக, ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமான நபராக அ.தி.மு.க.,வில் வலம் வந்தார். மேலும், அவருக்கு அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், சயான் மற்றும் அவரது கூட்டாளிகளை விடுவிக்க கூறியது குறித்து விசாரிக்க, கடந்த நவ., 5ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், அவர் ஆஜராகாததால், மீண்டும் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி., முருக வேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us