sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

/

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

1


ADDED : செப் 26, 2011 10:45 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:45 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார வளமையத்தில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி முகாமை வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெள்ளிங்கிரி துவக்கி வைத்தார்.

இதில், செயல்வழி கற்றலில், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல், சமூகவியல் ஆகிய பாடங்களுக்கு பாட வாரியாக சின்னங்கள், பாட அட்டையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மாணவர்களுக்கு எளிமையாக பாடம் கற்று கொடுக்கும் முறை, படைப்பாற்றல் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கல்வி அறிவயல், சமூகவியல் ஆகிய பாடங்களில், அறிமுகம், மனவரைப்படம் தொகுத்தல், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமில், ஆசிரிய பயிற்றுனர்கள் மகேஸ்வரி, சிவசெல்வி, காஜா மைதீன், காயத்ரி, அமுதவல்லி, சத்யமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த உண்டு, உறைவிட பள்ளி, இணைப்பு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் 54 பேர் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றிய இணைப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ஞானகுரு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நேற்று துவங்கிய பயிற்சி முகாம் நாளை (28ம் தேதி) வரை நடக்கிறது.








      Dinamalar
      Follow us