/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
ADDED : செப் 25, 2024 12:09 AM

கோவை : கோவை மாவட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில், கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை திறம்பட செயல்பட்டு, கைது செய்த, கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, எஸ்.பி., பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
இதில், 3 இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்.ஐ.,க்கள், 8 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 5 தலைமை காவலர்கள், 3 முதல் நிலை காவலர்கள், 17 காவலர்கள் என, மொத்தம், 42 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.