/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 29, 2025 11:59 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரத்தில் கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. விழாவையொட்டி ஜூலை, 1ம் தேதி மங்கள இசை, விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், தனபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடக்கிறது.
காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கோபுர கலச ஸ்தாபனம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு முதல் கால யாக பூஜை, 108 மூலிகை பொருட்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை, 2ம் தேதி காலை, 4:00மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மங்கள இசை, விநாயகர் பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை, 5:30 மணிக்கு மேல், 6:30 மணிக்குள் கலசம் புறப்பாடு, கோபுர விமான கலசம், கற்பக விநாயகமூர்த்தி கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.