/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வ விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்
/
செல்வ விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜன 19, 2024 11:25 PM
அன்னுார்:குரும்பபாளையம், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (21ம் தேதி) நடக்கிறது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு கும்ப அலங்காரம், முதற் கால யாக பூஜை, வேதபாராயணம் நடக்கிறது. இரவு 8 :00 மணிக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது, காலை 9:15 மணிக்கு, சக்தி விநாயகர் விமானங்களுக்கும், கோபுரத்திற்கும், புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, தச தரிசனம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.