/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : மே 27, 2025 09:47 PM
மேட்டுப்பாளையம்; கொடலூர் மாரியம்மன் கோவிலில், இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில், கொடலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் செய்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் கோவிலில் விமானங்கள், பரிவார் சன்னதிகள் ஆகியவை பழுது பார்த்தும், புதுப்பித்தும் வர்ணம் பூசும் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இன்று அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி பூஜையை தொடர்ந்து, நாடி சந்தானம், யாகசாலையில் இருந்து மூலவர் சுவாமிக்கு, அருள் சக்தி ஏற்றுதல் ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளன. காலை, 6:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், பரிவார் தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளன. காரமடை அஸ்வின் சிவாச்சாரியார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக வேள்வி பூஜைகளை செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.