/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால காலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
/
கால காலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
ADDED : மே 13, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்:
கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது.
கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், 1,300 ஆண்டுகள் பழமையான, கோவில்பாளையம், கால காலேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா, கடந்த 11ம் தேதி நடந்தது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் காலை 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. மதியம் 1:00 மணி வரையும், பின்னர், மாலை 4:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 மணி வரையும், லட்சார்ச்சனை நடந்தது.