sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருடிய மொபைல்போனை திருப்பி கேட்டவருக்கு அடி

/

திருடிய மொபைல்போனை திருப்பி கேட்டவருக்கு அடி

திருடிய மொபைல்போனை திருப்பி கேட்டவருக்கு அடி

திருடிய மொபைல்போனை திருப்பி கேட்டவருக்கு அடி


ADDED : ஜூலை 30, 2025 09:24 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் தினேஷ், 23; ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சந்துரு, 20. நேற்று சந்துரு, தினேஷ் வீட்டுக்கு சென்று பாரதி நகர் செல்ல, ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

தினேஷ் பின்னால் அமர்ந்து கொண்டார். சிறிது துாரம் சென்றதும் சந்துருவின் நண்பர்கள் லியோ, ஆகாஷ், 20 மற்றும் தரணி, 20 ஆகியோர் ஆட்டோவில் ஏறினர்.

பாரதி நகர் சென்றதும், அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்தனர். அதற்கு தினேஷ் மறுத்தார். இதனால் மூவரும் தினேசின் மொபைல்போனை எடுத்து வைத்துக்கொண்டனர்.

தினேஷ் வீட்டுக்கு புறப்படும் போது, போன் மாயமானதை அறிந்து, மூவரிடமும் போனை கேட்டார். அவர்கள் தர மறுத்து தினேசை தாக்கினர். தினேஷ் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, சந்துரு, லியோ ஆகாஷ், ஆகியோரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us