sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது போதையில் தகராறு செய்தவர் பலி; வாலிபர் கைது

/

மது போதையில் தகராறு செய்தவர் பலி; வாலிபர் கைது

மது போதையில் தகராறு செய்தவர் பலி; வாலிபர் கைது

மது போதையில் தகராறு செய்தவர் பலி; வாலிபர் கைது


ADDED : டிச 30, 2024 12:42 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஸ்டேட் பேங்க் ரோட்டில் டீக்கடை உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மதியம், 30 வயது மதிக்கத்தக்க நபர், குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு டீக்கடையில் பணிபுரியும் அன்வர் உசேன், 22 என்பவர் அவரிடம் இதுகுறித்து கேட்டார். இருவருக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் தகராறு செய்த நபரை, அன்வர் உசேன் பிடித்து தள்ளினார்.

கீழே விழுந்து அந்நபர் காயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, புலியகுளம் வி.ஏ.ஓ., சமயந்தி, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அன்வர் உசேனை சிறையில் அடைத்தனர். உயிரிழந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us