sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு

/

பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு

பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு

பெயரளவில் மட்டுமே செயல்படும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு


ADDED : ஜூலை 30, 2025 07:53 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், மேலாண்மை குழு பெயரளவில் மட்டுமே செயல்பாடுவதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இயங்கி வரும் மேலாண்மை குழுக்கள், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த, 2024ம் ஆண்டு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், புதிய உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.

தற்போது, துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே கூட்டம் நடத்தி, அந்த விபரம் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிராமப்புற அரசு பள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்துள்ளதால், கூட்டம் நடத்தி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பள்ளிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் உள்ளடக்கிய பள்ளி மேலாண்மை குழு உருவாக்கி, அதன் பணிகள், அதிகாரம் வரையறுக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால், தற்சமயம், கிராமப்புற பள்ளிகளில் உள்ளாட்சி பிரநிதிகள் கிடையாது. நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில், அதிகாரத்தில் உள்ள முக்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே மேம்பாட்டு பணி மேற்கொள்ள முடிகிறது.

கடந்த காலங்களில், மாதந்தோறும் மேலாண்மை குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது, பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கும் தேதிகளில் மட்டுமே பெயரளவில் கூட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us