sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலை பாதுகாப்பு குழு கருத்தாளராக மனுநீதி

/

சாலை பாதுகாப்பு குழு கருத்தாளராக மனுநீதி

சாலை பாதுகாப்பு குழு கருத்தாளராக மனுநீதி

சாலை பாதுகாப்பு குழு கருத்தாளராக மனுநீதி


ADDED : நவ 01, 2025 11:38 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு செயல்படுகிறது. இக்குழுவில் வருவாய்த்துறையினர், போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உள்ளனர்.

இக்குழு கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். மாநில நெடுஞ்சாலைத்துறையில் சாலை பாதுகாப்பு பிரிவில் கோட்ட பொறியாளராக இருந்த மனுநீதி, சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

இவரது பணிக்காலத்தில், கோவையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு ஏற்படுத்தினார் . அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பதற்காக, இவரது திறமையை பயன்படுத்தாமல் ஒதுக்கி விட வேண்டாம் என, தொழில்துறையினர் தரப்பில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவுக்கு கருத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் நடக்கும் குழு கூட்டத்தில் பங்கேற்று, பங்களிப்பை செலுத்த வேண்டு மென, கலெக்டர் பவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us