/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனவளக்கலை யோகா வகுப்பு துவக்கம்
/
மனவளக்கலை யோகா வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 06, 2025 09:15 PM
அன்னுார்; மனவளக்கலை யோகா வகுப்பு அன்னுாரில் வரும் 10ம் தேதி துவங்குகிறது.
அன்னுார் அ.மு. காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, முழுமை நல வாழ்விற்கு, மனவளக்கலை யோகா (ஆன்மிகம் ஒரு அறிமுகம்) வகுப்பு ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது.
உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ எளிய முறை உடற்பயிற்சி, மன அமைதி பெற தவப் பயிற்சி, உயிர் வளம் பெற்று, நீண்ட நாள் இளமையுடன் வாழ காய கல்ப பயிற்சி ஆகியவை கற்றுத் தரப்படுகிறது.
இலவச அறிமுக வகுப்பு வருகிற 10ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. சிறப்பு காயகல்ப பயிற்சி மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.
'மேலும் விவரங்களுக்கு 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் .