sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடுகளை சீரமைக்க அமைச்சர் உறுதி

/

வீடுகளை சீரமைக்க அமைச்சர் உறுதி

வீடுகளை சீரமைக்க அமைச்சர் உறுதி

வீடுகளை சீரமைக்க அமைச்சர் உறுதி


ADDED : மே 27, 2025 07:40 AM

Google News

ADDED : மே 27, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார் : பிச்சனுார் பஞ்.,க்குட்பட்ட நவக்கரை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிரங்கன். இரு நாட்களுக்கு முன் பெய்த மழையில் வீட்டின் முன் சுவர், மேற்கூரை (கான்கிரீட்) ஆகியவை இடிந்து விழுந்தன. பழனிரங்கன், மனைவி ராஜம்மாள் சிறு காயத்துடன் தப்பினர்.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும், 48 குடும்பத்தினர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கான உணவை வழங்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் முத்துசாமி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். பெட்ஷீட், அரிசி, பருப்பு வழங்கினார்.

அப்போது பழனிரங்கன் வீடு உள்பட இரு வீடுகளை சீரமைக்க, தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அத்துடன் இதர வீடுகளையும் விரைவில் சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us