/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொண்டிபாளையம் தேர்த்திருவிழா துவக்கம்
/
மொண்டிபாளையம் தேர்த்திருவிழா துவக்கம்
ADDED : பிப் 04, 2025 12:13 AM
அன்னுார்; மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.
நேற்று மாலை கோவில் வளாகத்தில் நகர சோதனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம் நடந்தது. செயல் அலுவலர், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (4ம் தேதி) காலை, பெருமாளுக்கு திருகாப்பு கட்டுதலும், காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள் பாலிக்கிறார். வருகிற பிப்., 7ம் தேதி வரை, தினமும் காலை 7:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
வரும் 9ம் தேதி இரவு யானை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.