/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த சில நாட்களுக்கு பருவமழை தொடரும்
/
அடுத்த சில நாட்களுக்கு பருவமழை தொடரும்
ADDED : ஜூலை 24, 2025 08:27 PM
பொள்ளாச்சி; அடுத்த சில நாட்களுக்கு கோவைமாவட்டத்தில் பருவமழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, கோவைமாவட்டத்தில்இதமான சூழலும்,மிதமான மழையும் பெய்து வருகிறது.வால்பாறைமலைப்பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாக, பதிவாகி வருகிறது. இன்று, வானம் பாதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கு, மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை,26ம் தேதி, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.ஆங்காங்கேமழைபொழிவு காணப்படும். வரும்,27ம் தேதி மழை பெய்யும். 28ம் தேதி வானம் தெளிவற்று காணப்படும் என, வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.அதற்கேற்ப, விவசாய பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.