sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாரலாக மாறிய பருவமழை; நீர்வரத்து சரிவு

/

சாரலாக மாறிய பருவமழை; நீர்வரத்து சரிவு

சாரலாக மாறிய பருவமழை; நீர்வரத்து சரிவு

சாரலாக மாறிய பருவமழை; நீர்வரத்து சரிவு


ADDED : ஜன 01, 2025 05:53 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. தொடர் மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை ஜூலை மாதம், 19ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதேபோல், காடம்பாறை அணை நிரம்பியதையடுத்து, மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், வால்பாறையில் தென்மேற்குப்பருவமழை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தீவிரமடைந்த நிலையில், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையும் நிரம்பின.

அதன்பின், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு சாரல்மழையாக மட்டுமே உள்ளது.

சமவெளிப்பகுதியிலும் மழை தீவிரமடையாததால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us