sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்

/

'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்

'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்

'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்


ADDED : செப் 19, 2024 11:07 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை கால் பந்து இறுதிப்போட்டிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியும் தகுதி பெற்றன.

பாரதியார் பல்கலையில் கல்லுாரி மாணவர்களுக்கான 'முதல்வர் கோப்பை' கால் பந்து போட்டிகள் கடந்த, 17ம் தேதி முதல் நடந்துவருகிறது. இதில், 64 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த அரையிறுதி போட்டியில், ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணியும் மோதின.

பரபரப்பாக விளையாடிய நாராயண குரு கல்லுாரி மாணவர்கள் மூன்று கோல்களை அடித்தனர். ஆனால், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, கோல் எண்ணிக்கையை துவங்காது, 3-0 என, தோல்வியை தழுவியது.

இரண்டாம் அரையிறுதி போட்டியில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. இதில், பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவர்கள் மூன்று கோல்கள் அடித்த நிலையில், கிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள் கோல் அடிக்காது தோல்வியை சந்தித்தனர்.

இறுதிப்போட்டிக்கு, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியும் தகுதி பெற்றன.






      Dinamalar
      Follow us