/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோசாலை மாடுகளுக்கு மாநகராட்சி சிறை
/
கோசாலை மாடுகளுக்கு மாநகராட்சி சிறை
ADDED : ஜன 11, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : நேருவிளையாட்டரங்கம் அருகே கிரேடவுன் சாலையில் அமைந்துள்ளது, தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில். இக்கோவில் கோசாலையை, துாய்மைப்படுத்துவதற்காக மூன்று மாடுகளை கோசாலைக்கு வெளியே, நேரு விளையாட்டரங்க சுற்றுப்புற சாலையில் கட்டியிருந்தனர்.
மாநகராட்சி பணியாளர்கள், மாடுகளை சிறைபிடித்து வ.உ.சி.,உயிரியல் பூங்காவளாகத்தில் கட்டிவைத்தனர். மாநகர ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மாடுகளை விடுவிக்க கோரினர். அதிகாரிகள் மறுத்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. சிறைபிடித்த அனைத்து மாடுகளும் விடுவிக்கப்பட்டன.