/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாகபத்ரகாளியம்மன் கோவில் உற்சவத் திருவிழா
/
நாகபத்ரகாளியம்மன் கோவில் உற்சவத் திருவிழா
ADDED : மே 13, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; போத்தனுார், பாரதி நகரில் உள்ள நாக பத்ரகாளியம்மன் கோவில் 13ம் ஆண்டு உற்சவ திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று காலை, 7:00 மணிக்கு, பேச்சியம்மன் கோவிலில் இருந்து, சக்திகரகம் அழைத்து வரப்படுகிறது. இரவு பூவோடு வழிபாடு நடக்கிறது.
நாளை காலை, 9:00 மணிக்கு, பொங்கல் வழிபாடும், மாலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு வழிபாடும் நடக்கிறது. 15ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டும், 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு சிறப்பு மகா அபிேஷக, அலங்கார பூஜையும், 10:00 மணிக்கு, பேச்சியம்மன் கோவில் பத்தர்கள் குழுவினரின் பஜனை, மதியம், அன்னதானம் நடக்கிறது.