/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீதாஞ்சலி பப்ளிக் பள்ளிக்கு தேசியளவில் பெருமை
/
கீதாஞ்சலி பப்ளிக் பள்ளிக்கு தேசியளவில் பெருமை
ADDED : டிச 20, 2025 05:42 AM

கோவை: கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் பவன், 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், இன்லைன் டவுன்ஹில்- 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி, இந்திய அரசும் இந்திய ஒலிம்பிக் சங்கமும் அங்கீகரித்துள்ள தேசிய விளையாட்டு அமைப்பான ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவர் பவன், 48.38 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து, தனது பிரிவில் இந்தியாவின் மிக வேகமான ஸ்கேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பவனை, கீதாஞ்சலி பள்ளிகளின் தலைவர் அழகிரிசாமி,முதல் வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவனை பாராட்டினர்.

