sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 231 மையங்களில் தேர்வு

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 231 மையங்களில் தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 231 மையங்களில் தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 231 மையங்களில் தேர்வு


ADDED : மார் 13, 2024 10:44 PM

Google News

ADDED : மார் 13, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, - உடுமலை கோட்டத்தில், 231 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், வரும் 17ம் தேதி தேர்வு நடக்கிறது.

ஊராட்சி, நகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு, அவர்களின் இடத்துக்குச்சென்று அடிப்படை கல்வியறிவு அளிப்பதற்காக, புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் செயல்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும், திட்டத்தை செயல்படுத்த பொதுவான கற்போர் மையம் துவக்கப்பட்டு, கல்வி கற்றுதர மையத்துக்கு ஒருவர் வீதம், தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தன்னார்வலர்கள் வாழ்வியல் திறன் சார்ந்த அடிப்படை கற்றலை கற்பிக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் கற்போருக்கான தேர்வு மார்ச் 17ம் தேதி நடக்கிறது.

உடுமலையில் 109, குடிமங்கலத்தில் 59 மடத்துக்குளத்தில் 63 மையங்களிலும் தேர்வு நடக்கிறது.

தேர்வில், வாசித்தல் 50 மதிப்பெண்ணுக்கும், எழுதுதல் 50 மற்றும் கணிதம் 50 என மொத்தமாக, 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகின்றன.

பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் தேர்வின் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர்.

தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு அன்று பிரிக்கப்பட்டு தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தலைமையாசிரியர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்துக்கு பொதுவான மையம் அமைக்கப்பட்டும், வீடுகளில் அவர்களை சந்தித்தும் ஆசிரியர்கள் தேர்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us