/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது மணப்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை
/
புது மணப்பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூன் 10, 2025 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; திண்டுக்கல் மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்தவர் தீபிகா, 21. இவருக்கும் குரும்பபாளையம் அருகே பண்ணாரி அம்மன் நகரை சேர்ந்த சேகர் மகன் சரவணன், 29. என்பவருக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. சரவணன் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில், தீபிகா வீட்டு மேற்கூரையில் உள்ள கொக்கியில், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.