sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இனி ஒட்டுவதற்கு இடமில்லை : அலங்கோலமானது நிழற்கூரை

/

 இனி ஒட்டுவதற்கு இடமில்லை : அலங்கோலமானது நிழற்கூரை

 இனி ஒட்டுவதற்கு இடமில்லை : அலங்கோலமானது நிழற்கூரை

 இனி ஒட்டுவதற்கு இடமில்லை : அலங்கோலமானது நிழற்கூரை


ADDED : டிச 04, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 04, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளன. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரை சமீப காலமாக அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

பயணியர் கூறியதாவது:

வால்பாறை நகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் விதிமுறையை மீறி விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், ஸ்டேன்மோர் சந்திப்பு, புதுத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பயணியர் நிழற்கூரையில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் அப்புறப்படுத்தி, பயணியர் நிழற்கூரையை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us