sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலத்தில் கிடக்கும் எண்ணெய் குழாய்கள்; விவசாயிகள் புகார்

/

நிலத்தில் கிடக்கும் எண்ணெய் குழாய்கள்; விவசாயிகள் புகார்

நிலத்தில் கிடக்கும் எண்ணெய் குழாய்கள்; விவசாயிகள் புகார்

நிலத்தில் கிடக்கும் எண்ணெய் குழாய்கள்; விவசாயிகள் புகார்


ADDED : மே 31, 2025 04:28 AM

Google News

ADDED : மே 31, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; 'எண்ணெய் குழாய்கள் விவசாய நிலங்களில் கிடப்பதால், விவசாயம் செய்ய முடியவில்லை,' என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல்., திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவன ஹந்தி வரை, 320 கி.மீ.,துாரத்துக்கு, குழாய் வழியாக பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இருகூரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை, 70 கி.மீ., துாரத்துக்கு, விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணி நடந்தது.

இதற்கு, பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்புதெரிவித்து, இரு மாவட்டங்களிலும் போராடி வருகின்றனர். இதனால், பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழுவின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கணேசன், ரவிக்குமார், ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களில் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், நாங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய இடையூறாக உள்ள குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரமாக குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளோம்,''என்றனர்.






      Dinamalar
      Follow us