/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
/
கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
ADDED : ஜூலை 10, 2025 10:12 PM
கோவை; திட்டமில்லா பகுதிகளில், 2011 ஜனவரி முதல் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒருவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அறிக்கை: அதன்படி, 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலத்துக்கு, கால நீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண்.92, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்படி கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவனகட்டடங்கள் மலையிடப்பகுதியில் ( ஹாக்கா) அமையும் பட்சத்தில் அரசு வழிவகுத்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.- இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.