/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழநி பாதயாத்திரை 49ம் ஆண்டு திருவிழா
/
பழநி பாதயாத்திரை 49ம் ஆண்டு திருவிழா
ADDED : பிப் 03, 2025 04:39 AM
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் முருகபக்தர்கள் காவடிக்குழுவின் பழநி பாதயாத்திரை, 49ம் ஆண்டு திருவிழா வரும், 14ம் தேதி நடக்கிறது.அன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 9:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்தல், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. 16ம் தேதி மாலை, 3:30 மணிக்கு பழநி ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையை துவங்குகின்றனர்.
விழா ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரைக்குழு தலைவர் மருதையப்பன், பொருளாளர் அழகுராஜ், செயலாளர்கள் கண்ணன், செந்தில்முருகன், அசோக், செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

