sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோலையாறு அணை உபரி நீரால் பரம்பிக்குளம் நீர்மட்டம் உயர்வு

/

சோலையாறு அணை உபரி நீரால் பரம்பிக்குளம் நீர்மட்டம் உயர்வு

சோலையாறு அணை உபரி நீரால் பரம்பிக்குளம் நீர்மட்டம் உயர்வு

சோலையாறு அணை உபரி நீரால் பரம்பிக்குளம் நீர்மட்டம் உயர்வு


ADDED : ஜூலை 04, 2025 09:53 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; சோலையாறு அணையிலிருந்து செல்லும் உபரி நீரால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. தொடர்ந்து பெய்த கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, கடந்த மாதம், 26ம் தேதி நிரம்பியது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, 10 நாட்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வரும் நிலையில், சோலையாறு அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர், சேடல்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 163.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,781 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,038 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது.

இதனால், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 58 அடியாக உயர்ந்தது. பரம்பிக்குளம் அணை தினமும் ஒரு அடி வீதம் உயர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us