sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

/

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : பிப் 17, 2024 02:08 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட தெம்பிலிபாளையத்தில், கடந்த ஒரு மாதமாக சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவில் சிறுவாணி மெயின் ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலாந்துறை (பொ) இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, 'ஒரு மாதமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட நபர்கள் உள்ள பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வாட்டர் மேன், முறையாக வேலை செய்வதில்லை. உடனடியாக, இப்பகுதிக்கு வேறு நபரை பணி அமர்த்த வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ஊராட்சி நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக குடிநீர் விநியோகிக்கப்படும் என, போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறுவாணி மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us