sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐ.ஜி., மேற்பார்வையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

/

ஐ.ஜி., மேற்பார்வையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

ஐ.ஜி., மேற்பார்வையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

ஐ.ஜி., மேற்பார்வையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்


ADDED : ஜன 04, 2024 12:41 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில், மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி மேற்பார்வையில் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர்.

அவர்களின் நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 61 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கையும், (எப்.ஐ. ஆர்.,), ஒரு மனு மீது, மனு ரசீதும் (சி.எஸ்.ஆர்.,) பதிவு செய்யப்பட்டது.

58 மனுக்கள் மீது சுமுகமான முறையிலும், 3 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கூடுதல் எஸ்.பி.,கள், டி.எஸ்.பி.,கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில், அந்தந்த உட்கோட்ட டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என, எஸ்.பி., பத்ரிநாராயணன் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us