/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., குறை தீர்ப்பு கூட்டம்
/
பி.எப்., குறை தீர்ப்பு கூட்டம்
ADDED : ஜூலை 25, 2025 09:20 PM
கோவை; கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மாதம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும், 28ம் தேதி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
கோவையில் துடியலுாரில் உள்ள, அக்வாசப் இன்ஜினியரிங் கல்லுாரியிலும், நீலகிரியில் ஊட்டி- தீட்டுக்கல் போஸ்ட், பெர்ன் ஹில்லில் உள்ள ஜே.எஸ்.எஸ்., பப்ளிக் ஸ்கூலிலும் இந்த கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை நேரில் முறையிடலாம்.
யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி.,எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் (2) அனந்தராமன் தெரிவித்துள்ளார்.