sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிள்ளையார்புரத்தை அச்சுறுத்தும் 'பிள்ளையாரப்பா'; கட்டுமான தொழிலாளி உயிர் தப்பிய அதிசயம்

/

பிள்ளையார்புரத்தை அச்சுறுத்தும் 'பிள்ளையாரப்பா'; கட்டுமான தொழிலாளி உயிர் தப்பிய அதிசயம்

பிள்ளையார்புரத்தை அச்சுறுத்தும் 'பிள்ளையாரப்பா'; கட்டுமான தொழிலாளி உயிர் தப்பிய அதிசயம்

பிள்ளையார்புரத்தை அச்சுறுத்தும் 'பிள்ளையாரப்பா'; கட்டுமான தொழிலாளி உயிர் தப்பிய அதிசயம்


ADDED : ஜன 28, 2025 11:55 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, பிள்ளையார்புரம் அருகே, ஒற்றை யானை கட்டுமான தொழிலாளியை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரம் அருகே மஞ்சிப்பள்ளம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று, கோவை --- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையை கடந்து வர முயன்றது. வனத்துறையினர் வந்து நள்ளிரவு வரை, யானையை வர விடாமல் தடுத்தனர்.

ஒரு கட்டத்தில் வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த யானை, சாலையை கடந்து, கோலப்பொடி மலை வழியாக, மோகன் நகர் பகுதியை வந்தடைந்துள்ளது.

அங்குள்ள கழிவுநீர் செல்லும் ஓடையை ஒட்டிய வனத்திற்குள் மறைந்து கொண்டது. நேற்று காலை சத்திகவுண்டர் தோட்டம் பகுதியில், வசிக்கும் கட்டுமான தொழிலாளி தர்மலிங்கம், 46. இயற்கை உபாதையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றார்.

இவரை கண்ட யானை, ஆவேசமாக துரத்தியுள்ளது. தர்மலிங்கம் உயிர் தப்பினார். அங்கு வந்த வனத்துறையினர், யானை குடியிருப்பு பகுதிக்கு வராமல் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தர்மலிங்கம் கூறுகையில், இன்று (நேற்று) காலை, 7:30 மணியளவில் காட்டுப் பகுதிக்கு சென்றேன். சிறிது தொலைவிலிருந்த யானை என்னை பார்த்து, தும்பிக்கையை ஆவேசமாக ஆட்டியவாறு வந்தது. ஐந்தடி தொலைவில் மரம் ஒன்று, குறுக்கே விழுந்து கிடந்தது. அதனுள் புகுந்தபோது, ஓடையில் தவறி விழுந்தேன். யானையால் வர முடியாததால் மயிரிழையில் உயிர் தப்பினேன், என்றார். இந்த ஒற்றை காட்டு யானை, கடந்த இரு வாரங்களாக இப்பகுதிக்கு தொடர்ந்து வருகிறது. அதனால் மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், கவனமாக செல்லுமாறு வனத்துறையினர், போலீசார் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us