/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்க திட்டம்
/
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்க திட்டம்
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்க திட்டம்
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்க திட்டம்
ADDED : ஜன 18, 2024 01:38 AM
கோவை-பெங்களூரு இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, பாலக்காடு வரை நீட்டிக்கப்படவுள்ளதாகப் பரவியுள்ள தகவல், கோவை மக்களிடம் கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை-பெங்களூரு இடையே, உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு மாறாக, பகல் நேர ரயிலாக இது இயக்கப்படுகிறது.
இந்த ரயில், காலை 5:45 மணிக்கு, கோவையில் புறப்படும் நிலையில், இதற்கு முன்பாக, காலை 5:00 மணிக்கு, பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் புறப்படுகிறது.
இந்நிலையில், உதய் ரயிலில், கடந்த வாரத்தில் ஒரு ஏ.சி.,பெட்டி கூட்டப்பட்டு, சென்னை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுடன், 'ரேக் ஷேரிங் அரேஞ்ச்மென்ட்' செய்யப்பட்டது. அப்போதே இந்த ரயிலை நீட்டிக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்தது.
அதற்கேற்ப, வரும் பிப்.,15 லிருந்து, இந்த ரயிலின் பராமரிப்பு, சென்னை பேசின் பிரிட்ஜ் பராமரிப்பு மையத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு வரை நீட்டிக்க திட்டம்?
இதன் தொடர்ச்சியாக, கோவையிலிருந்து புறப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, கேரள மாநிலம் பாலக்காடு வரை நீட்டிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் இரண்டாம் நிலையிலுள்ள கேரள அதிகாரிகள் சிலர், 'டெக்னாலஜி'யை காரணம் காட்டி, பாலக்காடுக்கு நீட்டிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.
கோவையிலிருந்து பெங்களூருக்கு நிறைய ரயில் தேவைகள் இருக்கும் நிலையில், ஏற்கனவே சென்னை-பெங்களூரு இணைப்பு ரயில் (ஸ்லீப்பர் கோச்சுகள்) சொரனுார்-கொச்சின் ஹார்பர் டெர்மினல் ரயில் பாதை போட்டவுடன் அங்கு நீட்டிக்கப்பட்டது.
இங்கிருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலையும், எர்ணாகுளம் வரை நீட்டித்தது தெற்கு ரயில்வே. அதற்குப் பதிலாக, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, பாலக்காட்டிலிருந்து கோவை வரை நீட்டிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதுவும் இதுவரை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த ரயிலையும் கேரளாவுக்கு நீட்டிக்கப்போவதாகப் பரவியுள்ள தகவல், கோவை மக்களிடம் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில், ரயில்வே வாரிய அதிகாரிகள் தலையிட்டு, உதய் எகஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பை, தடுக்க வேண்டியது அவசர அவசியம்!
-நமது நிருபர்-