sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு; நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி

/

கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு; நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி

கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு; நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி

கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு; நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி


ADDED : நவ 03, 2025 11:41 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை நகரில் சில கடைகளில் நகராட்சி அதிகாரிகள் கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு நடத்தினர்.

வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள், வால்பாறையில் உள்ள சில கடைகளில் கண் துடைப்புக்காக ரெய்டு நடத்தினர்.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியரிடம் ஆழியாறு மற்றும் மளுக்கப்பாறை சோதனை சாவடிகளில், பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். ஆனால் வால்பாறை நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நகராட்சி அதிகாரிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை.

இதனால், நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கண் துடைப்புக்காக அதிகாரிகள் ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, பாரபட்சமின்றி கடைகளில் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us