sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ எண் அவசியம்

/

பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ எண் அவசியம்

பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ எண் அவசியம்

பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ எண் அவசியம்


ADDED : நவ 03, 2025 09:41 PM

Google News

ADDED : நவ 03, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பி.எம்.கிசான் பயனாளிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம் என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி அறிக்கை: தமிழகத்தில், 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா, 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு உதவித் தொகையாக வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு, பி.எம். கிசான் பயனாளிகள், வரும் காலங்களில், தவணை தொகை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என, தெரிவித்துள்ளது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், இதுவரை 8,611 விவசாயிகள், தனித்துவ அடையாள எண் பதிவு செய்யப்படாமல் உள்ளனர்.

இவர்கள், நில உடைமை பதிவு மேற்கொண்டு, 21வது தவணையை தடையின்றி பெற்றுக் கொள்ள வேண்டும். பொது சேவை மையம் வாயிலாக தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல்போன் எண்ணுடன் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை, தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us