/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறையில் பயங்கரவாத கொடி கைதிக்கு 'போலீஸ் கஸ்டடி'
/
சிறையில் பயங்கரவாத கொடி கைதிக்கு 'போலீஸ் கஸ்டடி'
ADDED : ஜன 09, 2024 01:02 AM
கோவை;சிறைக்குள் பயங்கரவாத கொடி, பதுக்கிய விசாரணை கைதியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோவை மத்திய சிறையில் விசரணை கைதிகள் அறையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ., வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகீன், பேன்ட்ஸ் பாக்கெட்டில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடியை, காகிதத்தில் கருப்பு மையால் வரைந்து வைத்திருந்தது தெரியவந்தது.
சிறை அலுவலர்கள் கொடியை பறிமுதல் செய்த போது மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார், ஆசிப் முஸ்தகீன் மீது, 'உபா' சட்டம் உட்பட மூன்று பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்தனர்.
அவரை 'போலீஸ் கஸ்டடி' யில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்துள்ளனர்.