/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்களில் 8 கிலோ கஞ்சா கடத்தியவர்களுக்கு போலீசார் வலை
/
ரயில்களில் 8 கிலோ கஞ்சா கடத்தியவர்களுக்கு போலீசார் வலை
ரயில்களில் 8 கிலோ கஞ்சா கடத்தியவர்களுக்கு போலீசார் வலை
ரயில்களில் 8 கிலோ கஞ்சா கடத்தியவர்களுக்கு போலீசார் வலை
ADDED : ஆக 10, 2025 10:51 PM

கோவை, ; வடமாநிலங்களில் இருந்து ரயில்களில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு கன்னியாகுமரி - திப்ருகர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்டேஷனுக்கு வந்தது.
அப்போது ரயிலின் பொது பெட்டியில், மூட்டை ஒன்று கிடப்பதை பார்த்த மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அதை கைப்பற்றி சோதித்தனர்.
மூட்டைக்குள் இரண்டு கிலோ காய்ந்த நிலையில் கஞ்சா, 4 கிலோ பச்சை கஞ்சாவும் இருந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டையை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்னொரு சம்பவம் நேற்று காலை 6:30 மணிக்கு சென்னை - கோவை இடையேயான கோவை அதிவிரைவு ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலின் பொதுப்பெட்டியில் உள்ள கழிவறையில் கிடந்த மூட்டையை, சோதனை செய்தனர். அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது.இரு சம்பவங்களிலும், போலீசார் சோதனை செய்வதை பார்த்த உடன், கஞ்சா மூட்டைகளை போட்டு விட்டு, கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.